உள்ளூர் செய்திகள்
ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது

Published On 2022-02-14 16:05 IST   |   Update On 2022-02-14 16:05:00 IST
மதுரை கொட்டாம்பட்டி அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
மேலூர்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த கேசம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி துரைராஜ். இவரது மனைவி பெரியஅழகி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. 

இதுகுறித்து கொட்டாம்பட்டி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கர்ப்பிணிப் பெண்ணை ஆம்புலன்ஸில் ஏற்றி பிரசவத்திற்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் வழியில் பெரிய அழகிக்கு வலி அதிகமானதால் சாலையோரமாக ஆம்புலன்சு நிறுத்தினர். பின்னர் டிரைவர் ராஜா மற்றும் மருத்துவ உதவியாளர் சிவகுமார் அப்பெண்மணிக்கு பிரசவம் பார்த்ததில் பெண் குழைந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து தாய்- சேயை மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

Similar News