உள்ளூர் செய்திகள்
.

சேலம் பஸ் நிறுத்தத்தில் ஆண் பிணம்

Published On 2022-02-14 15:54 IST   |   Update On 2022-02-14 15:54:00 IST
சேலம் பஸ் நிறுத்தத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார்.
கருப்பூர்:

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் எதிரில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இங்கு  40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அங்கு நின்றிருந்த பயணிகள் கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு கிடந்த ஆண் பிணத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்துபோனவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த நபர் கருப்பு நிறம் உடையவர் ஆவார். அந்த நபர் மார்பில் அங்கம்மா என்று பெயர் பச்சை குத்தி உள்ளார். இடது கையில் லேசான காயம் உள்ளது. இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News