உள்ளூர் செய்திகள்
வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் தேர்தல் அதிகாரிகள்
உள்ளாட்சி தேர்தலையொட்டி வீடு வீடாக சென்று பூத் சிலிப்பை தேர்தல் அதிகாரிகள் வழங்கினர்.
அரக்கோணம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் அரக்கோனம் நகராட்சி. நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி உள்ளிட்ட 3 டவுன் பஞ்., களில் வீடு, வீடாக சென்று பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.
அரக்கோணத்தில் உள்ள 24 வார்டுகளில்.காவேரிபாக்கத்தில் உள்ள 15 வார்டுகளிலும் 4 குழுக்களாக பிரிந்து செயல் அலுவலர் மனோகரன், தலைமையில் ஊழியர்கள் பூத் சிலிப் வழங்கி வருகின்றனர்.
இதேபோல பனப்பாக்கம் பகுதியில் 15 வார்டுகளிலும் செயல் அலுவலர் குமார் முன்னிலையில் பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி நடைபெற்றது.
15 வார்டுகள் கொண்ட நெமிலி டவுனில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பூத் சிலிப் வழங்கினர்.