உள்ளூர் செய்திகள்
களக்காடு கோவிலில் தெப்பத்திருவிழா
களக்காடு சந்தான கோபாலகிருஷ்ணர் கோவிலில் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
களக்காடு:
களக்காட்டில் ஆண்டு தோறும் தை மாதம் 3 நாட்கள் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி நடப்பாண்டு திருவிழா கடந்த 11-ந் தேதி கோலாகலத்துடன் தொடங்கியது. முதல்நாள் சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் திருக்கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
2-ம் நாளான நேற்று முன் தினம் இரவில் களக்காடு வரதராஜபெருமாள் கோவில் தெப்ப திருவிழா நடைபெற்றது. 3-ம் நாளான நேற்று களக்காடு சந்தான கோபால கிருஷ்ணர் கோவில் தெப்ப விழாவும் நடந்தது.
விழாவை முன்னிட்டு சந்தான கோபால கிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சந்தான கோபால கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 13 முறை வலம் வந்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பக்குளத்தின் நாலாபுறமும் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி தெப்பமும், தெப்பக்குளத்தின் நடுவே உள்ள நீராழி மண்டபமும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.
களக்காட்டில் ஆண்டு தோறும் தை மாதம் 3 நாட்கள் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி நடப்பாண்டு திருவிழா கடந்த 11-ந் தேதி கோலாகலத்துடன் தொடங்கியது. முதல்நாள் சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் திருக்கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
2-ம் நாளான நேற்று முன் தினம் இரவில் களக்காடு வரதராஜபெருமாள் கோவில் தெப்ப திருவிழா நடைபெற்றது. 3-ம் நாளான நேற்று களக்காடு சந்தான கோபால கிருஷ்ணர் கோவில் தெப்ப விழாவும் நடந்தது.
விழாவை முன்னிட்டு சந்தான கோபால கிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சந்தான கோபால கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 13 முறை வலம் வந்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பக்குளத்தின் நாலாபுறமும் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி தெப்பமும், தெப்பக்குளத்தின் நடுவே உள்ள நீராழி மண்டபமும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.