உள்ளூர் செய்திகள்
பைக்கில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது
சேத்துப்பட்டு அருகே பைக்கில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் சந்தைமேடு பகுதியில் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி சப் இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த பைக்கை மடக்கி சோதனை செய்தபோது அதில் 50 கிராம் எடை கொண்ட கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து பைக்கில வந்த இரண்டு வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.