உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

திண்டுக்கல் அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் கால் முறிவு

Published On 2022-02-14 14:15 IST   |   Update On 2022-02-14 14:15:00 IST
திண்டுக்கல் அருகே தனியார் பஸ் மோதி வாலிபரின் கால்கள் முறிந்தன
வடமதுரை:

திண்டுக்கல் அருகில் உள்ள மணியக்காரன்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் சுரேஷ் (வயது 26). இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார்.

விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கோவைக்கு சென்றார். வெள்ளபொம்மன்பட்டியில் தனியார் பஸ் இவர் மீது மோதியதில் 2 கால்களும் முறிந்தது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News