உள்ளூர் செய்திகள்
தாக்குதல்

ஆஸ்பத்திரி ஊழியர் மீது தாக்குதல்

Published On 2022-02-12 13:10 GMT   |   Update On 2022-02-12 13:10 GMT
தனியார் ஆஸ்பத்திரி ஊழியரை தாக்கிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை

மதுரை பழைய ராமநாதபுரம் ரோட்டில்  உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்ப்பவர் சேத்தூர் செல்வகுமார்(வயது 49). 

இவர் பணியில் இருந்த போது 2 பேர் படுகாயமடைந்த வாலிபர் ஒருவரை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது அவர்கள் காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிக்க வலியுறுத்தினர். 

காயமடைந்தவர் குடிபோதையில் உள்ளார்.  எனவே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள்’ என்று  செல்வகுமார் தெரிவித்தார். 

இது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இதில் செல்வகுமார் தாக்கப் பட்டார்.

தாக்குதல் சம்பவம் குறித்து அவர்  தெப்பக்குளம் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். 

இதில் சிகிச்சைக்கு வந்தவர் தென்னரசு என்பதும், அவரை அழைத்து வந்தது ஐராவதநல்லூர் ரவுடி ஆப்பாயில் ஆறுமுகம் மற்றும் கார்த்திக் என்பதும் தெரியவந்தது. தப்பி ஓடிய ரவுடி உள்பட 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News