உள்ளூர் செய்திகள்
விபத்து

படப்பை அருகே மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் ஒருவர் பலி

Published On 2022-02-11 13:38 GMT   |   Update On 2022-02-11 13:38 GMT
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படப்பை:

சென்னை அமைந்தகரை, அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் ( வயது 42 ),‌ இவர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆதனூர் பகுதியில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News