உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ராணிப்பேட்டையில் திருட்டில் ஈடுபட்ட 2-பேர் கைது

Published On 2022-02-11 15:08 IST   |   Update On 2022-02-11 15:08:00 IST
ராணிப்பேட்டை அருகே திருட்டில் ஈடுபட்ட 2-பேர் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் நேற்று ஆட்டோ நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். 

போலீசார் விசாரணையில் மதுரையைச் சேர்ந்த அஜித் (23) ராணிப்பேட்டையில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். மற்றொருவர் 17 வயது சிறுவன் ஆவான்.இவர்கள் இருவரும் ராணிப்பேட்டை மற்றும் வாலாஜா பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. 

சமீபத்தில் ராணிப்பேட்டை தனியார் கம்பெனி அருகே ஒரு பெண்ணிடம் 2 சவரன் செயின் பறிப்பு மற்றும் வாலாஜா கோயிலில் ரூ.3000 ரோக்கம் மற்றும் கணினி திருட்டு ஆகிய சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. 

இதனை அடுத்து அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிளில் இரண்டு சவரன் நகைகள் மற்றும் கணினி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News