உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர் சின்னம் ஒட்டும் பணி தொடங்கியது

Published On 2022-02-11 15:01 IST   |   Update On 2022-02-11 15:01:00 IST
வேலூர் மாநகராட்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர் சின்னம் ஒட்டும் பணி தொடங்கியது
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. 

வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்துவதற்காக வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் அடங்கிய பேப்பர் அச்சடிக்கப்பட்டு அந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஆகிய நகராட்சி கள், திருவலம், பென்னாத்தூர், ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான பேலட் பேப்பர்களும் அந்தந்த பகுதிளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்து வருகின்றனர். 

மொத்தம் 178 வார்டுகளுக்கு தேர்தல் நடக்க உள்ளதால் ஒரு வாக்குச் சாவடிக்கு ஒரு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. 

இதற்காக மொத்தம் 628 வாக்குப்பதிவு எந்திரங்கள், 628 கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வாக் குப்பதிவு எந்திரங்களில் பெயர், சின்னங்கள் அடங்கிய பேலட் பேப்பர் பொருத்தும் பணி இன்று மாலை முதல் நடக்கிறது. 

வேலூர் மாநகராட்சியில் 60 வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 2 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இது தவிர 58 வார்டுகளில் மொத்தம் 354 பேர் போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 437 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

 இதில் 2 வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடிகள் தவிர மற்ற வாக்குச்சாவடிகளுக்கு தேவையான எந்திரங்களில் வாக்காளர் பெயர் சின்னம் ஒட்டும் பணி இன்று மதியம் தொடங்கியது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்:-

 ஏற்கனவே வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங் கள் 2 கட்டமாக கனிணி முறையில் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒட்ட பேலட் பேப்பரில் வேட்பாளரின் பெயர், சின்னங்கள் அச்சிடும் பணி 9-ந்தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. 
இவற்றை 3 வது கட்டமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வார்டுகள் வாரியாக கணினி முறையில் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. 

வார்டுகள் வாரியாக பேலட் பேப்பர் பொருத்தும் பணி ஓரிருநாளில் தொடங்கும். பேலட் பேப்பர்கள் அச்சிடும் அச்சகம் மற்றும் குடோன்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மேலும் பேலட் பேப்பர் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட உள் ளது. தேர்தலை எவ்வித பாதிப்பும் இன்றி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

Similar News