உள்ளூர் செய்திகள்
வேலூர் டி.கே.எம் கல்லூரியில் தேர்தல் அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்த காட்சி.

தேர்தல் அலுவலர்களுக்கு 2-வது கட்ட பயிற்சி வகுப்பு

Published On 2022-02-10 14:46 IST   |   Update On 2022-02-10 14:46:00 IST
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு 2-வது கட்ட பயிற்சி வகுப்பு இன்று நடந்தது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு, நகராட்சிகள் பள்ளிகொண்டா, திருவலம், பென்னாத்தூர், ஒடுகத்தூர் பேரூராட்சிகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் வகையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலகம் மூலமாக தேர்தல் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 31-ந் தேதி நடந்தது.இன்று 2-வது கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது.

வேலூர் மாநகராட்சியில் டி.கே.எம். கல்லூரி, குடியாத்தம் நகராட்சி திருவள்ளுவர் பள்ளி, பேரணாம்பட்டு இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி, பள்ளிகொண்டா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பென்னாத்தூர் பேரூராட்சியில் அடுக்கம்பாறை அரசு நடுநிலைப்பள்ளி, திருவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒடுகத்தூர் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் இன்று பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் 2 ஆயிரத்து 331 பேர் கலந்து கொண்டனர்.

ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் வாக்குப்பதிவு அலுவலர்கள் ஆகியோருக்கான பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து 3-வது கட்ட பயிற்சி வகுப்பு வருகிற 18-ந் தேதி நடக்க உள்ளது.

Similar News