உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

குடியாத்தம் ரெயில் மோதி வாலிபர் சாவு

Published On 2022-02-10 14:42 IST   |   Update On 2022-02-10 14:42:00 IST
குடியாத்தம் அருகே ரெயில் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த கீழ் பாட்டி, குரு நாதபுரம், அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 42) இவர் மாற்றுத் திறனாளி. இவர் நேற்று காலை மேல் ஆலத்தூர் வளத்தூர் ரெயில் நிலையம் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். 

அப்போது சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற டபுள்டக்கர் விரைவு ரெயிலில்  அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News