உள்ளூர் செய்திகள்
அரக்கோணம் அருகே ஆற்றில் மூழ்கி இளம் பெண் பரிதாபமாக இறந்தார்.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த அரிகிலாபாடி பாளையக்கார கண்டிகையை சேர்ந்தவர் தனசேகர் (36). டிராக்டர் டிரைவர் இவரது மனைவி நந்தினி (29). இவர்களுக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு பெண் மற்றும் 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
நந்தினி மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று கல்லாறில் மாடுகளை சுத்தம் செய்வதற்காக ஆற்றில் இறங்கியபோது ஆழமான பகுதி இருப்பது தெரியாமல் கால் தவறி நீரில் மூழ்கினார்.
இதனை கண்ட அங்கிருந்தவர்கள் உடனே ஆற்றில் இறங்கி தேடினர். ஆனால் நந்தினி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவரை பிணமாகதான் மீட்க முடிந்தது.
அரக்கோணம் தாலுகா போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.