உள்ளூர் செய்திகள்
அரக்கோணம் அருகே பேரிடர் மீட்பு படை இயக்குனர் ஆய்வு
அரக்கோணம் பேரிடர் மீட்பு படை இயக்குனர் 4 வது பட்டாலியனில் ஆய்வு செய்தார்.
அரக்கோணம்:
அரக்கோணம்தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குநர் அத்துல் கார்வால் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை 4 வது பட்டாலியனில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்பு வீரர்களுடன் உடற்பயிற்சி மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.
மேலும் பேரிடர் காலங்களில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் மோப்ப நாய்களையும் பார்வையிட்டார் பின்பு வீரர்களுடன் கலந்துரையாடி குறை நிறைகளை கேட்டறிந்தார் .
பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகள் குறித்தும் பயிற்சிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் படைப்பிரிவின் சீனியர் கமாண்டன்ட் ரேகா நம்பியார் மற்றும் அதிகாரிகளின் கலந்துகொண்டனர்.