உள்ளூர் செய்திகள்
அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா, மற்றும் ஆசிரியர்களிடம் கண்காணிப்பு கேமராவை வழங்கினர்.
பல்லடம்:
பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மங்கலம் ரோட்டில் செயல்படுகிறது. இங்கு சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளியின் பாதுகாப்புக்காக பல்லடம் தனியார் அறக்கட்டளை சார்பாக ரூ.15 ஆயிரம் மதிப்பில் 5 கண்காணிப்பு கேமராக்கள், 2 ஒலிபெருக்கிகள் வழங்கப்பட்டது. அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா, மற்றும் ஆசிரியர்களிடம் வழங்கினர்.