உள்ளூர் செய்திகள்
பாபநாசத்தில் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாபநாசம்:
பாபநாசம்-சாலியமங்கலம் சாலையில் வசித்து வருபவர் வாசு மித்திரன் (வயது 48) விவசாயி. இவருடைய மைத்துனர் வடக்குநாயக்கன்பேட்டையைச் சேர்ந்த திருமலைராஜன் (38). சம்பவத்தன்று இருவரும் மோட்டார் சைக்கிளில் பாபநாசம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது பாபநாசத்திலிருந்து சாலியமங்கலம் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வாசுமித்ரன், திருமலைராஜன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்&இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.