உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ராணிப்பேட்டையில் வாக்குபதிவு அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு தேதி மாற்றம்

Published On 2022-02-08 15:26 IST   |   Update On 2022-02-08 15:26:00 IST
ராணிப்பேட்டையில் வாக்குபதிவு அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு தேதி மாற்றம்
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நாளை (புதன்கிழமை) நடைபெற  இருந்து. 

நிர்வாக காரணங்களுக்காக 10-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும். வாக்குப்பதிவு அலுவலர்கள் தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயிற்சி வகுப்புகள் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அதே இடத்தில் மற்றும் நேரத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். 

இந்த தகவலை  கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

Similar News