உள்ளூர் செய்திகள்
Ranipettai News

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,067 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

Published On 2022-02-08 15:20 IST   |   Update On 2022-02-08 15:20:00 IST
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,067 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1067 பேர் போட்டியிடுகின்றனர். 4 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அரக்கோணம் நகராட்சியில் 216 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 210 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில் 49 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 161 பேர் போட்டியிடுகின்றனர்.

ஆற்காடு நகராட்சியில் 116 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 18 பேர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். 2 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 96 பேர் போட்டியிடுகின்றனர். 

மேல்விஷாரம் நகராட்சியில் 137 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 135 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 6 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 129 பேர் போட்டியிடுகின்றனர்.

ராணிப்பேட்டை நகராட்சியில் 126 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 123 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 23 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 100 பேர் போட்டியிடுகின்றனர்.

சோளிங்கர் நகராட்சியில் 167 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 162 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 46 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 116 பேர் போட்டியிடுகின்றனர்.

வாலாஜா நகராட்சியில் 92 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஒரு மனு நிராகரிக்கப்பட்டது. 91 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 7 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 86 பேர் போட்டியிடுகின்றனர்.

மொத்தமுள்ள 6 நகராட்சிகளில் 854 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 837 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 149 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 2 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 686 பேர் போட்டியிடுகின்றனர்.

அம்மூர் பேரூராட்சியில் 70 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 19 பேர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். 51 பேர் போட்டியிடுகின்றனர்.
கலவை பேரூராட்சியில் 49 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஒரு மனு நிராகரிக்கப்பட்டது. 48 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. யாரும் வாபஸ் பெறவில்லை. 48 பேர் போட்டியிடுகின்றனர்.

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 7 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 57 பேர் போட்டியிடுகின்றனர்.

நெமிலி பேரூராட்சியில் 53 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஒரு மனு நிராகரிக்கப்பட்டது. 52 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 6 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 46 பேர் போட்டியிடுகின்றனர்.

பனப்பாக்கம் பேரூராட்சியில் 44 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஒரு மனு நிராகரிக்கப்பட்டது. 43 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2 பேர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். 41 பேர் போட்டியிடுகின்றனர்.

தக்கோலம் பேரூராட்சியில் 65 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 12 மேற்கு வாபஸ் பெற்றுக்கொண்டனர். 53 பேர் போட்டியிடுகின்றனர்.

திமிரி பேரூராட்சியில் 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஒரு மனு நிராகரிக்கப்பட்டது. 55 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 10 பேர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 44 பேர் போட்டியிடுகின்றனர். 

விளாப்பாக்கம் பேரூராட்சியில் 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஒரு மனு நிராகரிக்கப்பட்டது. 45 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 3 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

41 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தமுள்ள 8 பேரூராட்சிகளில் 447 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 442 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 59 பேர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். 2 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 381 பேர் போட்டியிடுகின்றனர்.

மாவட்டம் முழுவதிலும் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் 1301 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 22 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 1279 ஏற்றுக்கொள்ளப்பட்டது. 208 பேர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். 4 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1067 பேர் போட்டியிடுகின்றனர்.

Similar News