உள்ளூர் செய்திகள்
வேலூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
வேலூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
வேலூர்:
வேலூர் தோட்டப்பாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் அன்பழகன் (வயது 27). வெல்டிங் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த அன்பழகன் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டார். இதனைக்கண்ட அவரது உறவினர்கள் அன்பழகனை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.