உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ராணிப்பேட்டையில் 22 மனுக்கள் நிராகரிப்பு, 1,279 மனுக்கள் ஏற்பு

Published On 2022-02-07 15:17 IST   |   Update On 2022-02-07 15:17:00 IST
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் 22 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1,279 மனுக்கள் ஏற்கப்பட்டது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் 1301 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. 

இதில் அரக்கோணம் நகராட்சியில் 216 மனுக்களில் 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. ஆற்காடு நகராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 116 மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

மேல்விஷாரம் நகராட்சியில் 137 மனுக்களில் 2 மனுக்களும், ராணிப்பேட்டை நகராட்சி 126 மனுக்களில் 3 மனுக்களும், சோளிங்கர் நகராட்சியில் 167 மனுக்களில் 5 மனுக்களும், வாலாஜா நகராட்சியில் 92 மனுக்களில் ஒரு மனுவும் நிராகரிக்கப்பட்டது. 

அம்மூர் பேரூராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 70 மனுக்களும், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 64 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

தக்கோலம் பேரூராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 65 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.கலவை பேரூராட்சியில் 49 மனுக்களில் ஒரு மனுவும், நெமிலி பேரூராட்சியில் 53 மனுக்களில் ஒரு மனுவும், பனப்பாக்கம் பேரூராட்சியில் 44 மனுக்களில் ஒரு மனுவும், திமிரி பேரூராட்சியில் 56 மனுக்களில் ஒரு மனுவும், விளாப்பாக்கம் பேரூராட்சியில் 46 மனுக்களில் ஒரு மனு நிராகரிக்கப்பட்டது.

Similar News