உள்ளூர் செய்திகள்
சேத்துப்பட்டில் பாறை அடியில் பெண் பிணம்
சேத்துப்பட்டு அருகே பாறைக்கு அடியில் பெண் பிணம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஜெபட்டியில் பூம்பாறை உள்ளது.
அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் அந்த வழியாக சென்ற போது பாறையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் அழுகிய நிலையில்கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அரசம்பட்டு கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.அவர் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சப்&இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண் பிணத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா-? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.