உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

மனைவியை தாக்கிய கணவருக்கு சிறை

Published On 2022-02-07 06:18 GMT   |   Update On 2022-02-07 06:18 GMT
மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி:

திருச்சி ஏர்போர்ட் அருகிலுள்ள குளாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலையரசி (வயது 39). இவரது கணவர் சண்முகம். கொத்தனாராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வந்த சண்முகம், தனது மனைவி கலையரசியிடம் தகராறு செய்து, தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த கலையரசி, ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சண்முகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News