உள்ளூர் செய்திகள்
உடைக்கப்பட்ட சாமி சிலைகள்.

ஆலங்குடியில் சாமி சிலைகள் உடைப்பு

Published On 2022-02-07 06:15 GMT   |   Update On 2022-02-07 06:15 GMT
ஆலங்குடியில் சாமி சிலைகளை உடைத்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளங்குறிசி கடுக்காகாடு கிராமத்தில் தெற்கு பகுதியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது.

அப்பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற கோயில் ஆகும். இக்கோயிலில் தற்போது சிலைகள் புதுப்பிக்கப்பட்டு விழா நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்தனர். அப்போது அங்கு இருந்த காளிசிலை, அய்யனார்சிலை, கருப்பர்சிலை அம்மணகாளி அனைத்து சிலைகளும் உடைக்கப்பட்டு சேதமாகி இருந்தது.

இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த வடகாடு போலீசார், அப்பகுதியில் சுற்றித்திரிந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரசோழபுரம் பாலகுரு என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News