உள்ளூர் செய்திகள்
குடும்ப தகராறில் எலக்ட்ரிசீயன் தூக்குபோட்டு தற்கொலை
குடும்ப தகராறில் எலக்ட்ரிசீயன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அம்மன்நகர் பகுதியை சேர்ந்தவர் நிஷார் (வயது22). இவர் பெங்களூரில் உள்ள சோலார் நிறுவனத்தில் எலக்ட்ரிசீயனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.
இந்த நிலையில் கணவன்&மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டது. நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட நிஷார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து குருபரப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த நிஷார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.