உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

காவேரிப்பாக்கத்தில் தேர்தல் அதிகாரி ஆய்வு

Published On 2022-02-06 15:02 IST   |   Update On 2022-02-06 15:02:00 IST
காவேரிபாக்கம் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும் பணிகளை தேர்தல் பொது பார்வையாளர் எஸ்.வளர்மதி ஆய்வு செய்தார். 

காவேரிபாக்கம் பேரூராட்சியில் வேட்பு மனுக்கள் பரிசீலனை  நேற்று.

வேட்புமனுக்களில் வேட்பாளர்கள் வழங்கியுள்ள படிவங்களில் உரிய முறையில் பூர்த்தி செய்து ஆவணங்களை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சரிபார்த்த பின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய முகவர்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக தெரிவித்து வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. 

மேலும் வேட்புமனுக்கள் நிராகரிப்பு குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்து வேட்பாளரிடம் தெரிவிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளின் போது ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதை வேட்பாளர்கள் தெரிவிக்கலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர். 

அதற்கான விளக்கங்களையும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்கினார்கள். இந்த பணிகள் நடைபெற்று வந்ததை காவேரிப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் பொது பார்வையாளர் எஸ்.வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் வேட்புமனுக்கள் ஏற்பு மற்றும் நிராகரிப்பு குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின்போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வட்டார தேர்தல்  பார்வையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 

Similar News