உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

Published On 2022-02-06 14:52 IST   |   Update On 2022-02-06 14:52:00 IST
ஊத்துமலையை அடுத்த சோலைசேரி மொட்டையன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து முகன் இளவரசன் (வயது 13) நேற்று மதியம் அதே தெருவில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து இளவரசன் குளிக்க சென்றார். அப்போது குளத்தில் மூழ்கி பலியானார்.
நெல்லை:

ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த சோலைசேரி மொட்டையன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து(வயது 40). இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார்.
 
இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். இதில் ஒருவரான இளவரசன் (13) நேற்று மதியம் அதே தெருவில் உள்ள தனது நண்பர்கள் சிலருடன் விளையாட சென்றுள்ளார்.  பின்னர் ஊருக்கு வடபுறத்தில் உள்ள பெரியகுளத்தில் நண்பர்களுடன் சேர்ந்து இளவரசன் குளிக்க சென்றார்.
 
அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற இளவரசன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அங்கு குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சிறுவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News