உள்ளூர் செய்திகள்
கொரோனா பரவல் காரணமாக எனது புதிய படங்கள் ரீலிஸ் தள்ளிச் சென்று விட்டன- நடிகர் அருண்விஜய் பேட்டி
கொரோனா பரவல் காரணமாக எனது புதிய படங்கள் ரீலிஸ் தள்ளிச் சென்று விட்டன இன்று திருவண்ணாமலையில் நடிகர் அருண்விஜய் கூறினார்.
திருவண்ணாமலை:
தமிழகத் திரை உலகில் உள்ள இளம் கதாநாயகர்களில் நடிகர் அருண்விஜய் குறிப்பிடத்தக்கவர்.
இவர் கதாநாயகன் மட்டுமின்றி வில்லனாகவும் நடித்து புகழ்பெற்றவர்.இவர் நடித்த சில படங்கள் திரைக்கு வர தயாராக உள்ள நிலையில் இன்று காலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அவர் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் உள்ளிட்ட ஒவ்வொரு சன்னதிக்கும் சென்று வழிபட்டார். பின்னர் தங்கக் கொடிமரம் முன்பு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.
அவரைக் காண பக்தர்கள் மிகவும் ஆர்வம் காட்டினர். சிலர் அவருடன் ஆர்வமாக செல்பி எடுத்துக்கொண்டனர்.
பின்னர் நடிகர் அருண்விஜய் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
நான் நடித்த சில திரைப்படங்கள் வரிசையாக ரிலீசாக உள்ளன.கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி மாதம் ரிலீசாக வேண்டிய படங்கள் மார்ச் மாதத்திற்கு தள்ளி சென்று விட்டன.
நான் எனது படங்கள் ரிலீசாகும் முன்பு அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம். கொரோனா ஊரடங்கால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அண்ணாமலையாரை தரிசனம் செய்ய முடியவில்லை.
தற்போதுதான் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்தது.இந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு இசை உலகத்துக்கு பேரிழப்பு ஆகும். அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.