உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்த வாலிபர்
ஓசூர் அருகே கர்நாடக எல்லைபகுதியில் உடல் எரிந்து நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்ததை யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேகேபள்ளி கிராமம் கர்நாடக எல்லையில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை கர்நாடக எல்லை பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அத்திப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வாலிபர் வெட்டப்பட்டு, அடையாளம் தெரியாத வகையில் முகம் எரிக்கப்பட்டு இருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொல்லப்பட்டார்? அவரை கொன்று சடலத்தை ஓசூர் அருகே கர்நாடக எல்லைப்பகுதியில் வீசி சென்றது யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.