உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 இடங்களில் வாக்கு எண்ணிக்கை

Published On 2022-02-05 16:04 IST   |   Update On 2022-02-05 16:04:00 IST
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக 3 வாக்கு எண்ணும் மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், மேல்விஷாரம் ஆகிய 6 நகராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக வாக்கு எண்ணும் மையம் வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும், அரக்கோணம் நகராட்சியில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக வாக்கு எண்ணும் மையம் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியிலும்.

அம்மூர், கலவை, காவேரிப்பாக்கம், நெமிலி, பனப்பாக்கம், தக்கோலம், திமிரி, விளாப்பாக்கம் ஆகிய 8 பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக வாக்கு எண்ணும் மையம் தென்கடப்பந்தாங்கல் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியிலும் அமைக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Similar News