உள்ளூர் செய்திகள்
வேலூர் ஊரீசு பள்ளியில் அரசு அலுவலர் பதவி உயர்வுக்கான எழுத்துத்தேர்வு எழுதிய காட்சி.

அரசு அலுவலர்கள் பதவி உயர்வுக்கான எழுத்து தேர்வு

Published On 2022-02-05 15:24 IST   |   Update On 2022-02-05 15:24:00 IST
வேலூர் ஊரீசு பள்ளியில் அரசு அலுவலர்கள் பதவி உயர்வுக்கான எழுத்து தேர்வு நடந்தது.
வேலூர்:

வேலூர் ஊரீசு பள்ளியில் அரசுத்துறை சார்ந்த அலுவலர்களுக்கு பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வு நடந்தது.

இதற்கு பள்ளி தலைமை ஆசிரியரும், கண்காணிப்பாளருமான எபினேசர் முன்னிலையில் அலுவலர்கள் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வுகள் 2 விதமாக நடைபெற்றது. அனுமதிக்கப்பட்ட புத்தகங்களை பார்த்தும், புத்தகங்களை பார்க்காமலும் எழுதினர். இந்த தேர்வுகள் நேற்று தொடங்கியது. நாளையும் நடைபெற உள்ளது. 

இன்று நடந்த தேர்வில் 90 அலுவலர்கள் கலந்து கொண்டு எழுதினர்.

Similar News