உள்ளூர் செய்திகள்
அம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை

108 குத்துவிளக்கு பூஜை

Published On 2022-02-05 13:27 IST   |   Update On 2022-02-05 13:27:00 IST
நாகை தேவூர் தேவ துர்க்கையம்மன் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூர் தேவதுர்க்கை அம்மன் கோவிலில் தை வெள்ளியையொட்டி 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நிற்கவும், கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் எனவும் பிரார்த்தனையோடு குத்துவிளக்கு ஏற்றி, 108 வேத மந்திரங்கள் முழங்க குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர். 

தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Similar News