உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அரக்கோணம் நகராட்சியில் ஒரே நாளில் 116 பேர் வேட்பு மனு தாக்கல்

Published On 2022-02-04 15:15 IST   |   Update On 2022-02-04 15:15:00 IST
அரக்கோணம் நகராட்சியில் ஒரே நாளில் 116 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அரக்கோணம்:

அரக்கோணம் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 116 பேர் நேற்று ஒரே நாளில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்ற நிலையில் அரசியல் கட்சியினர் நேற்று போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர். 

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 28&ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்கள். 

நேற்று வேட்பு மனு தாக்கல் களைகட்டியது. வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (வெள்ளிக் கிழமை) கடைசி நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் ஏராளமானோர் செய்து வருகிறார்கள். திமுக, அதிமுக, பா.ஜ.க., பா.ம.க., நாம் தமிழர் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.

அதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் அரக்கோணம் நகராட்சியில் 116 பேரும், தக்கோலம் பேரூராட்சியில் 23 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

இது வரையில் அரக்கோணம் நகராட்சியில் 133 பேரும், தக்கோலம் பேரூராட்சியில் 44 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. நாளை (5-ந்தேதி) மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. பின்னர் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

Similar News