உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் கொள்ளை நடந்தது குறித்து சி.சி.டி.வி. கேமரா காட்சி முலம் விசாரணை

Published On 2022-02-04 15:09 IST   |   Update On 2022-02-04 15:09:00 IST
ராணிப்பேட்டை அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் கொள்ளை நடந்தது குறித்து சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தனிப்படை விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அண்ணா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் எஸ்.எம்.சுகுமார். இவர் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை பொருளாளராக உள்ளார்.
 
கடந்த 31-ந்தேதி அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு ரூ.38 லட்சம் ரொக்கப் பணம், ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 

இதுகுறித்து தொழிலதிபர் சுகுமார் ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் டிஎஸ்பி பிரபு தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

இது குறித்து டிஎஸ்பி பிரபு கூறியதாவது:-

அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தில் 2 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி கொண்டிருக்கிறோம். 

அவரது வீட்டிலிருந்த சி.சி.டி.வி. கேமரா ரிசீவரை மர்ம கும்பல் எடுத்து சென்றதால் வீட்டை சுற்றி உள்ள மற்ற கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். 

விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என தெரிவித்தார்.

Similar News