உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

இல்லம் தேடி கல்வி பயிலும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-02-04 09:24 GMT   |   Update On 2022-02-04 09:24 GMT
இல்லம் தேடி கல்வி பயிலும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி  அலுவலரின் வழிகாட்டுதலின்படி திருவரங்குளம் அணவயல் அடுத்த சுக்கிரன் குண்டுவில் கல்வி&சுகாதாரவிழிப்புணர்வும், இல்லம் தேடிக் கல்வியில் பயிலும் மாணவ& மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கும் விழாவும் நடைபெற்றது.

விழாவிற்கு  திருவரங்குளம் வட்டாரக்கல்வி  அலுவலர் கருணாகரன் தலைமை தாங்கினார். அணவயல் ஊராட்சி   மன்றத்தலைவர் புஸ்பராணி  சின்னத்துரை, துணைத்தலைவர்   லெட்சுமி முத்துச்சாமி, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்  ராஜாக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், மாவட்ட மனநல மருத்துவ அலுவலர் கார்த்திக்தெய்வநாயகம் ஆகியோர் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டு, பேனா, புத்தகப் பை,சீருடைகள், காலணிகளை வழங்கினர்.

விழாவில்  ஆசிரியர்கள் மணியன், பழனியப்பன், பஷீர்அலி, செந்தில்குமார், முனியசாமி, சசிகுமார், சையது  இப்ராம் ஷா, கிராம நிர்வாக அலுவலர் ராஜா மற்றும் சுரேஷ், பகத்சிங்  ராஜேந்திரன், காசிம் புதுப்பேட்டை பள்ளி தலைமையாசிரியர் செந்தில்வடிவு பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News