உள்ளூர் செய்திகள்
கோவில் வளாகத்தில் உள்ள ஒரு அறையின் கதவு பூட்டை மர்ம நபர் உடைத்து இருப்பதை படத்தில் காணலாம்.

வாலாஜா காசி விஸ்வநாதர் கோவிலில் கொள்ளை முயற்சி

Published On 2022-02-03 15:35 IST   |   Update On 2022-02-03 15:35:00 IST
வாலாஜா காசி விஸ்வநாதர் கோவிலில் நடந்த கொள்ளை முயற்சியால் பரபரப்பு.
வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா எம்.பி.டி சாலையையொட்டி காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.

இந்த கோவில்  பிரதோஷ நாட்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பொதுமக்கள் வழிபட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் இன்று விடியற்காலை மர்ம நபர்கள் கோவிலின் சுற்று சுவர் மீது ஏறி கோயிலில் குதித்து கோயில் நுழைவுவாயில் உள்ள அறையின் பூட்டை உடைத்து அறையில் இருந்த கணினி திருடிக்கொண்டு பின்னர்  கோயில் வளாகத்தில் உள்ள கதவை உடைக்க முயற்சி செய்தனர். அப்போது அலாரம் சத்தம் கேட்டதும் கணினியை தூக்கிக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து கோவில் நிர்வாகிகள் வாலாஜா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News