உள்ளூர் செய்திகள்
பஸ்சில் படியில் தொங்கி செல்லும் மாணவர்கள்

பஸ்சில் படியில் தொங்கி செல்லும் மாணவர்கள்

Published On 2022-02-03 15:21 IST   |   Update On 2022-02-03 15:21:00 IST
ஓடும் பஸ்சில் மாணவர்கள் படியில் தொங்கி செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் ஆபத்தை உணராமல் அரசு பஸ்சில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

வெட்டுவானத்தில்  இருந்து பள்ளிகொண்டா மார்க்கமாக வேலூர்  செல்லும் அரசு பஸ்சில், இருபுறமும் உள்ள படிக்கட்டு மற்றும் ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி ஏராளமான பள்ளி மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.
 
சிலர் ஆபத்தை உணராமல் ஜன்னல் கம்பியை பிடித்தவாறு ஓடும் பஸ்சில் சாகசம் செய்தனர்.
படியில் மாணவர்களை பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அரசு  டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். 

அதோடு காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படியில் பயணம் செய்யக்கூடாது. அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். ஆனால்,  பள்ளிகொண்டா மார்க்கமாக செல்லும் அரசு பஸ்சில்  மாணவர்களை படியில் தொங்கியவாறு பயணிக்க  அனுமதித்துள்ளனர்.

விபரீதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக  நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, மாணவர்களுக்கு போதிய அறிவுரை வழங்க வேண்டும் என கூறும் பொது மக்கள், மாணவர்களுக்காக கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும்.

படியில் பயணம் நொடியில் மரணம் என்பதை என்றும், எப்போதும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மனதில் நிறுத்த வேண்டும் என போலீசாரும், சமூக ஆர்வலர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News