உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

குருமாவில் அரணை கிடந்த ஓட்டலுக்கு நோட்டீஸ்

Published On 2022-02-03 15:18 IST   |   Update On 2022-02-03 15:18:00 IST
குருவராஜபாளையத்தில் குருமாவில் அரணை கிடந்த ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேலூர்:

ஒடுகத்தூரை அடுத்த குருவராஜபாளையம் பஸ்நிலையம் எதிரே உள்ள ஓட்டலில் கடந்த 31-ந் தேதி மகமதுபுரத்தை சேர்ந்த 4 பேர் சாப்பிட்டனர். அப்போது பரோட்டாவிற்கு வழங்கிய குருமாவில் அரணை வெந்த நிலையில் கிடந்தது. 

அதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் குருவராஜபாளையத்தில் இயங்கும் ஓட்டல்களில் திடீரென ஆய்வு செய்தனர். 

அப்போது குருமாவில் அரணை கிடந்த ஓட்டல் உள்பட 2 ஓட்டல்கள் சுகாதாரம் இன்றி இயங்கியது தெரிய வந்தது. அதையடுத்து அந்த 2 ஓட்டல்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

மேலும் 15 நாட்களுக்குள் சுகாதாரமான முறையில் ஓட்டல் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஓட்டலுக்கு சீல் வைக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Similar News