உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ராணிப்பேட்டையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வட்டார பார்வையாளர்கள் நியமனம்

Published On 2022-02-02 15:23 IST   |   Update On 2022-02-02 15:23:00 IST
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வட்டார பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் தேர்தல் பணிகள் நியாயமாகவும், வெளிப்படையாகவும் மற்றும் உரிய காலத்தில் துரிதமாக தேர்தல் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்யவும், 

தேர்தல் தொடர்பான அறிக்கைகள் உடனுக்குடன் மாவட்ட கலெக்டர் மற்றும் பொது பார்வையாளருக்கு சமர்ப்பிக்கவும், ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பும் ஒரு துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர் வட்டார பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, ராணிப் பேட்டை நகராட்சிக்கு ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஏ.எஸ்.குமார், ஆற்காடு நகராட்சிக்கு ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு) என்.ஏ.மதுமிதா, மேல்விஷாரம் நகராட்சிக்கு ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) ஜி.என்.கௌரி, 

வாலாஜா நகராட்சிக்கு ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (உள்கட்டமைப்பு-1) ஏ.ஸ்டெல்லா பாய், 

அரக்கோணம் நகராட்சிக்கு ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (உள்கட்டமைப்பு-2) எம்.சுவாமிநாதன், 

சோளிங்கர் நகராட்சிக்கு ஊரக வளர்ச்சி முகமை கணக்கு அலுவலர் எஸ்.சசிகலா ஆகியோர் வட்டார பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு உதவி இயக்குனர் (தணிக்கை) ஆர்.ஆனந்தன், 

அம்மூர் பேரூராட்சிக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் தாரகேஸ்வரி, 

காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உதவி இயக்குனர் (வேளாண்மை) கே.சண்முகம், 

கலவை பேரூராட்சிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் எம்.இளவரசி, நெமிலி பேரூராட்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் எஸ்.சேகர், 

பனப்பாக்கம் பேரூராட்சிக்கு தனித்துணை ஆட்சியர் (நிலம் எடுப்பு சிப்காட் பனப்பாக்கம்) எஸ்.அகிலாதேவி, 

திமிரி பேரூராட்சிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.மணிமேகலை, தக்கோலம் பேரூராட்சிக்கு உதவி ஆணையர் (கலால்) சத்திய பிரசாத் ஆகியோர் வட்டார பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Similar News