உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை

Published On 2022-02-01 15:27 IST   |   Update On 2022-02-01 15:27:00 IST
வேலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை 5 மையங்களில் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

வேலூர் மாநகராட்சிக்கு வேலூர் தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரியிலும், குடியாத்தம் நகராட்சி வாக்குகள் அங்குள்ள ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும்.

பேரணாம்பட்டு நகராட்சி வாக்குகள் அங்குள்ள இஸ்லாமிய கல்லூரி ஆகிய இடங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

ஒடுகத்தூர் பள்ளிகொண்டா பேரூராட்சி வாக்குகள் பள்ளிகொண்டா லிட்டில் பிளவர் பள்ளியிலும், பென்னாத்தூர் திருவலம் பேரூராட்சி வாக்குகள் பள்ளிகொண்டாவில் உள்ள ஆர்.சி.எம். பள்ளியிலும் எண்ணிக்கை நடைபெற உள்ளன.

Similar News