உள்ளூர் செய்திகள்
குடியாத்தத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி
குடியாத்தத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
குடியாத்தம்:
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், சீவூர் ஊராட்சி கள்ளூர் கிராமத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியில் இருந்து கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. பூஜை செய்து கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அகோரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தீபிகாபரத், அமுதாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.