உள்ளூர் செய்திகள்
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 21 மீனவர்கள் சிறைபிடிப்பு
இரட்டைமடி, சுருக்குமடி போன்ற தடை செய்த வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்று இலங்கை மீனவர்கள் கூறியதன் பேரில் தமிழக மீனவர்கள் காங்கேசன் துறைமுகம் சென்றதாக கூறப்படுகிறது.
நாகப்பட்டினம்:
நாகை அக்கரைபேட்டையை சேர்ந்தவர் மீனவர் அமிர்தலிங்கம் (வயது 43). இவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகை மாவட்டத்தை சேர்ந்த செல்வம், மணிகண்டன், ஆறுமுகம், வினோதன், கந்தன், நரசிம்மன், மணி, தேவா, ஹரி, குணால், வெற்றி மற்றும் அமிர்தலிங்கம் உள்பட 12 மீனவர்கள் கடந்த 29-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
இதேபோல் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி மேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அப்பகுதியை சேர்ந்த 9 மீனவர்களும் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
மீனவர் மணிகண்டன் தனது விசைப்படகை நாகை மாவட்டத்தை சேர்ந்த குமாரி என்பவரிடம் இருந்து வாங்கி பதிவு எண்ணை மாற்றாமல் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் மணிகண்டன், அமிர்தலிங்கம் ஆகிய இருவரும் நாகை மீன்துறை அலுவலகத்தில் கடலுக்கு மீன் பிடிக்க டோக்கன் பெற்று மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
இரண்டு படகில் இருந்த 21 மீனவர்களும் கடல் வளம் மிகுந்து காணப்படும் காங்கேசன் துறைமுகம் அருகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
இப்பகுதியில் தமிழக மீனவர்கள் எப்போது வேண்டுமானாலும் மீன்படிக்கலாம். ஆனால் இரட்டைமடி, சுருக்குமடி போன்ற தடை செய்த வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்று இலங்கை மீனவர்கள் கூறியதன் பேரில் தமிழக மீனவர்கள் அப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதன்பேரில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் எல்லை பகுதியான காங்கேசன் துறையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது 9 பைபர் படகுகளில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள் அதிக வெளிச்சம் கொண்ட டார்ச் லைட்டால் 2 படகுகள் மீதும் வெளிச்சத்தை பாய்ச்சி தமிழக மீனவர்களை சுற்றி வளைத்துள்ளனர்.
அப்போது தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கிறீர்களா? இதனால் இப்பகுதியில் மீன்வளம் பாதிக்கப்படுகிறது என கூறி மணிகண்டன், அமிர்தலிங்கம் படகில் இருந்த 21 மீனவர்களையும் அழைத்து சென்று மயிலட்டி துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்து புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அமிர்தலிங்கம், மணிகண்டன் ஆகியோரது விசைப்படகும் மயிலட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை காங்கேசன் அல்லது பருத்தித்துறை நீதிமன்றத்தில் தமிழக மீனவர்களை ஆஜர்படுத்தி விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியவருகிறது.
நாகை அக்கரைபேட்டையை சேர்ந்தவர் மீனவர் அமிர்தலிங்கம் (வயது 43). இவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகை மாவட்டத்தை சேர்ந்த செல்வம், மணிகண்டன், ஆறுமுகம், வினோதன், கந்தன், நரசிம்மன், மணி, தேவா, ஹரி, குணால், வெற்றி மற்றும் அமிர்தலிங்கம் உள்பட 12 மீனவர்கள் கடந்த 29-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
இதேபோல் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி மேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அப்பகுதியை சேர்ந்த 9 மீனவர்களும் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
மீனவர் மணிகண்டன் தனது விசைப்படகை நாகை மாவட்டத்தை சேர்ந்த குமாரி என்பவரிடம் இருந்து வாங்கி பதிவு எண்ணை மாற்றாமல் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் மணிகண்டன், அமிர்தலிங்கம் ஆகிய இருவரும் நாகை மீன்துறை அலுவலகத்தில் கடலுக்கு மீன் பிடிக்க டோக்கன் பெற்று மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
இரண்டு படகில் இருந்த 21 மீனவர்களும் கடல் வளம் மிகுந்து காணப்படும் காங்கேசன் துறைமுகம் அருகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
இப்பகுதியில் தமிழக மீனவர்கள் எப்போது வேண்டுமானாலும் மீன்படிக்கலாம். ஆனால் இரட்டைமடி, சுருக்குமடி போன்ற தடை செய்த வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்று இலங்கை மீனவர்கள் கூறியதன் பேரில் தமிழக மீனவர்கள் அப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதன்பேரில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் எல்லை பகுதியான காங்கேசன் துறையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது 9 பைபர் படகுகளில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள் அதிக வெளிச்சம் கொண்ட டார்ச் லைட்டால் 2 படகுகள் மீதும் வெளிச்சத்தை பாய்ச்சி தமிழக மீனவர்களை சுற்றி வளைத்துள்ளனர்.
அப்போது தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கிறீர்களா? இதனால் இப்பகுதியில் மீன்வளம் பாதிக்கப்படுகிறது என கூறி மணிகண்டன், அமிர்தலிங்கம் படகில் இருந்த 21 மீனவர்களையும் அழைத்து சென்று மயிலட்டி துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்து புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அமிர்தலிங்கம், மணிகண்டன் ஆகியோரது விசைப்படகும் மயிலட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை காங்கேசன் அல்லது பருத்தித்துறை நீதிமன்றத்தில் தமிழக மீனவர்களை ஆஜர்படுத்தி விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியவருகிறது.
இதையும் படியுங்கள்... வால்பாறை சாலையில் உலா வந்த புலி- சுற்றுலா பயணிகள் செல்போனில் படம் பிடித்து பரப்பினர்