உள்ளூர் செய்திகள்
அரக்கோணத்தில் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு

அரக்கோணத்தில் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு

Published On 2022-01-31 17:58 IST   |   Update On 2022-01-31 17:58:00 IST
அரக்கோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்.என்.பாளையம் ஊராட்சி தொடக்க பள்ளியில் ரூ.8.12 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் கட்டி முடிக்கப்பட்டதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரக்கோணம்:

அரக்கோணம் ஒன்றியம் பாராஞ்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பையும் ஊராட்சியில் கட்டப்பட்டுவரும் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் வீடுகளையும் நேரடியாக சென்று பார்வையிட்டார். அப்போது வீடு கட்டும் பணிக்கு நிதி உதவி கிடைக்காமல் பணி நிலுவையில் உள்ளதை பயனாளிகள் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்த போது அதற்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

பின்னர், ஊராட்சியில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி கால்வாய் தூர்வாரும் பணி நடைப்பெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அலுவலர்களிடம் 100 நாள் பணியாளர்கள் பணி நேரம் முழுவதும் பணி செய்வதையும், அதிக வயதானவர்களுக்கு வேலை வழங்கிடும்போது அவர்கள் பணி செய்வார்களா என்பதையும் உறுதி செய்து பணியினை வழங்கிட வேண்டும் என்றும் தெரிவித்தார். 

தொடர்ந்து, அரக்கோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்.என்.பாளையம் ஊராட்சி தொடக்க பள்ளியில் ரூ.8.12 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் கட்டி முடிக்கப்பட்டதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் மரக்கன்றுகள் இல்லாமல் இருந்ததை பார்த்து பள்ளியை சுற்றிலும் மரக்கன்றுகள் நட உத்தரவிட்டார். அனைத்து வளர்ச்சித் திட்ட பணிகளில் கட்டுமான பணிகள் தரமானதாக இருப்பதையும் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆய்வின் போது உதவி திட்ட அலுவலர் மதுமிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் மற்றும் பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

Similar News