உள்ளூர் செய்திகள்
கிருமி நாசினி தெளிக்கப்பட்ட காட்சி.

பாணாவரம் அருகே டெங்கு பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

Published On 2022-01-30 14:12 IST   |   Update On 2022-01-30 14:12:00 IST
பாணாவரம் டெங்கு பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
பாணாவரம்:

பாணாவரம் அடுத்த ரசூல் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 50). விவசாயி. இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. 

இந்த நிலையில் சோளிங்கரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைகாக சேர்ந்தார். 

அங்கும் குணமாகாததால் வேலூர் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அங்கு பரிசோதித்து பார்த்தபோது அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி யானது. 

இந்நிலையில் வட்டார மருத்துவ அலுவலர் டேவிஸ் பிரவீன் ராஜ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன்ராஜ், சுகாதார ஆய்வாளர் தமிழரசன் உள்ளிட்டோர் பாணாவரம் பகுதிகளில் வேறு யாருக்கும் டெங்கு பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்து வருகின்றனர்.

மேலும் ரசூல் பேட்டை முழுவதும் கொசுப்புழுக்களை ஒழிக்க பாணாவரம் பஞ்., தலைவர் அர்ஜுனன் மற்றும் ஊழியர்கள் வீடு வீடாக சென்று கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News