உள்ளூர் செய்திகள்
தாளவாடி- திம்பம் மலைப்பகுதிகளில் கடும் குளிரால் மக்கள் அவதி
தாளவாடி- திம்பம் மலைப்பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து உள்ளனர். முதியவர்கள் வெளியில் வர தயக்கமடைந்து உள்ளனர்.
சத்தியமங்கலம்:
தாளவாடி- திம்பம் மலைப்பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து உள்ளனர். முதியவர்கள் வெளியில் வர தயக்கமடைந்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் பனி பொழிவு காரணமாக கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் கடும் குளிர் வாட்டி வருகிறது.
தாளவாடி, கேர்மாளம், ஆசனூர், திம்பம் உள்பட மலைப்பகுதிகளில் இன்று அதிகாலை கடும் குளிர் வாட்டியது. இதனால் அதிகாலையில் வனப்பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுவட்டர், குல்லா அணிந்த படியே வந்தனர்.
மேலும் சத்தியமங்கலம், பண்ணாரி, பவானிசாகர், சிக்கரசம்பாளையம், புளியங்கோம்பை, அரியப்பம் பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடும் குளிர் வாட்டியது. இதனால் முதியவர்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கி தவித்தனர்.
இதே போல் அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கடும் குளிர் அடித்து வருகிறது. மேலும் வாகன ஓட்டிகள் காலை வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டப் படியே சென்று வருகிறார்கள்.
இதே போல் ஈரோடு, கோபி, கவுந்தப்பாடி, பவானி, ஆப்பக்கூடல், சித்தோடு, பெருந்துறை, சென்னி மலை, மொடக் குறிச்சி மற்றும் மாவட்டம் முழு வதும் காலை நேரத்தில் கடும் குளிர் வாட்டுகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார் கள்.