உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வாக்குசாவடிகளில் 874 கேமராக்கள் பொருத்தப்படுகிறது

Published On 2022-01-29 15:10 IST   |   Update On 2022-01-29 15:10:00 IST
வேலூர் மாநகராட்சி தேர்தல் நடைபெறும் வாக்குசாவடிகளில் 874 கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
வேலூர்:

 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

 இதையொட்டி, வேலூர் மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் மொத்தம் 437 ஏற்க வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

இவற்றில், தேர்தல் நாளில் ஓட்டுபோட வரும் வாக்காளர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கும் வகையிலும், வாக்குச்சாவடிகளின் உள்ளே மற்றும் வெளியே நடக்கும் கண்காணிக்கும் வகையிலும், தலா 2 கேமராக்கள் வீதம் மொத்தம் 874 கேமராக்கள் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 

அதேநேரம் நிகழ்வுகளை மாநகநகராட்சி பகுதியில் உள்ள 71 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என பட்டியலில் உள்ளதால், அவற்றில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளும் வகையில், “லைவ் ஸ்டிரிமிங்” எனப்படும் ஆன்லைனில் பார்க்கக்கூடிய வகையிலான கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது. 

அதேபோல், ஒட்டுப்பதிவு முடிந்து, ஓட்டு மிஷின்களை பாதுகாப்பாக வைக்கும் “ஸ்டிராங்” ரூமில் 6 கேமராக்கள் பொருத்தப்படுகிறது. 

இதற்கிடையே, வேட்புமனு தாக்கலுக்கு நியமிக்கப்பட்டுள்ள 6 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறைகளில், ஆன்லைனில் பார்க்கக்கூடிய வகையில் 6 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

ஓட்டுப்பதிவின்போது நடக்கும் எல்லா நிகழ்வுகளும் இந்த கேமராக்களிலேயே பதிவாகும். 

தொடர்ந்து ஓட்டுப்பதிவு முடிந்ததும் அந்த கேமராக்களில் உள்ள மெமரி கார்டுகள் அனைத்தும், பாதுகாப்பாக ஓட்டுப்பெட்டிகள் வைக்கும் அறையில் வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News