உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சுமால் லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம்

Published On 2022-01-29 15:01 IST   |   Update On 2022-01-29 15:01:00 IST
சுமால் லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம் என வேலூர் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர்:

ஆன்லைன் மூலம் நடைபெறும் பணம் பறிமுதல் மற்றும் குற்றச் செயல்களை தடுக்க சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

சுமால் லோன் ஆப் மூலம் கடன் பெறுவதை தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தினர்.

சுமால் லோன் ஆப் களில் கடன் பெற வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அப்படி நீங்கள் அந்த சுமால் லோன் ஆப் மூலம் கடன் பெற்றால், பெரும் விளைவை எதிர்கொள்ள நேரிடும்.

சுமால் லோன் ஆப்களில் பான்கார்டு, வங்கிக் கணக்கு விவரம் மற்றும் உங்களது புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்யச் சொல்லும்.

அந்த ஆப்- ல் உள்ள விதிமுறைகளை உறுதி செய்யச்சொல்லும்.
பின்பு செல்போன் எண்ணை எடுத்து கொள்ளும். நாம் எப்போதும் மற்ற ஆப்-ல் அனுமதி கேட்பது போல இருக்கும் என்று எண்ணி உறுதிசெய்து லோன் வாங்கிவிடுவோம். 

நாம் வாங்கிய கடனுக்கு மிக அதிகபட்சமான வட்டியை கட்ட சொல்லி மிரட்டுவார்கள். 

அப்படி நாம் கட்டா விட்டால் நம் செல்போனில் பதிவு செய்துள்ள மற்ற எண்களுக்கு அனைவருக்கும் தகாத வார்த்தைகளிள் குறுந்தகவல் அனுப்பியும் மற்றும் நம் புகைப்படத்தை தவறாக சித்தரித்து அதனை அனைவருக்கும் அனுப்பிவிடுவேன் என்று நம்மை மிரட்டுவார்கள். 

நாம் அதற்கு பயந்து அவர்கள் கூறிய வட்டியையும், அசலையும் செலுத்திவிட்ட பின்னரும் மீண்டும் பணத்தை அவர்களே நமது வங்கிக் கணக்கில் செலுத்தி அதற்கான வட்டியையும், அசலையும் நம்மை கட்ட சொல்லி மிரட்டுவார்கள். 

எனவே இதுப்போன்ற சுமால் ஆப் லோன்களை இணையத்திலிருந்து பதிவிறக்கத்தை தவிர்த்திடுங்கள் என வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News