உள்ளூர் செய்திகள்
தலைவர்கள் உருவத்துடன் கூடிய அலங்கார வாகனத்தை கண்டு ரசித்த பொதுமக்கள்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சென்னை குடியரசுதின அணிவகுப்பில் பங்கேற்ற தலைவர்கள் உருவத்துடன் கூடிய அலங்கார வாகனத்தை பொதுமக்கள் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சென்னை குடியரசுதின அணிவகுப்பில் பங்கேற்ற தலைவர்கள் உருவத்துடன் கூடிய அலங்கார வாகனத்தை பொதுமக்கள் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இந்திய குடியரசு தின விழா தமிழக அரசின் சார்பில் கடந்த 26--ந் தேதி சென்னை தீவுத்திடலில் நடந்தது. இந்த விழாவில் தியாக தலைவர்களின் உருவ சிலைகள் அமைக்கப்பட்ட 3 அலங்கார வாகனங்கள் அணிவகுப்பில் கொண்டு வரப்பட்டன.
இந்த வாகனங்களை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொது மக்கள் பார்வைக்குக் காட்சிப் படுத்த தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு ள்ளார். முதற்கட்டமாக ஈரோடு, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் இந்த வாகனங்கள் காட்சிப் படுத்தப்படுகின்றன.
இதற்காக வாகன பயணத்தை 3 மாவட்ட ங்களுக்கும் செல்லும் வகையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒரு வாகனம் மதுரைக்கும், இன்னொரு வாகனம் கோவைக்கும் செல்கிறது. 3- வது அலங்கார வாகனம் இன்று ஈரோடுக்கு வந்தது.
இந்த அலங்கார வாகனத்தில் பெரியார், ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காமராஜர், சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர் ரெட்டை மலை சீனிவாசன், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, கொடிகாத்த திருப்பூர் குமரன், இலக்கியவாதி வ.வே.சு.ஐயர், காயிதே மில்லத், தஞ்சை ஜோசப் கொர்னேலியாஸ் செல்ல துரை குமரப்பா, கக்கன் ஆகியோரின் புகழ் பரப்பும் உருவச்சிலைகள் அமைக்கப் பட்டுள்ளன.
இந்த அலங்கார வாகனம் பவானி காவிரி ஆற்றுப் பாலம், தேசிய நெடுஞ்சாலை, பவானி பவிஷ் பார்க் பகுதியில் வந்தது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி என்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் முத்துசாமி வரவேற்றார்.அதைத் தொடர்ந்து பொதுமக்கள் பார்வையிடுவதற்காக அந்த அலங் கார வாகனம் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் பிற துறை அதிகாரிகள், பொதுமக்கள் அலங்கார வாகனத்தை பார்வையிட்டனர்.
பொதுமக்கள் ஆர்வத் துடன் அலங்கார வாகனத் தின் முன்பு நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். இன்று 2-வது நாளாகவும் அலங்கார வாகனத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இந்த வாகனம் வரும் 31-ந் தேதி வரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப் பட்டிருக்கும்.
தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பொதுமக்கள் பார்வை க்காக வைக்கப்பட்டு இருக்கும். சுதந்திர போராட்ட வீரர்களை பாராட்டும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.