உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க 12 பறக்கும் படையினர் சோதனை

Published On 2022-01-28 15:14 IST   |   Update On 2022-01-28 15:14:00 IST
பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க வேலூர் மாநகராட்சியில் 12 பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் மாநகராட்சி குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள் பென்னாத்தூர், திருவலம், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் ஆகிய பேரூராட்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

ஆவணம் இன்றி பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சியில் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் உதவி கலெக்டர் தரத்தில் ஒரு அதிகாரி மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் ஒரு பெண் போலீசார் ஒரு கேமரா மேன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மாநகராட்சி பகுதிகளில் சோதனையில் ஈடுபடுகின்றனர்.

ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

வியாபாரிகள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணத்துடன் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதேபோல குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சி மற்றும் 4 பேரூராட்சிகளிலும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனை, வாக்கு எண்ணிக்கை நடக்கும் வரை, அமலில் இருக்கும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News