உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஏர்வாடி அருகே கோவிலில் திருடிய முதியவர் கைது

Published On 2022-01-27 09:23 GMT   |   Update On 2022-01-27 10:51 GMT
ஏர்வாடி அருகே உள்ள பொத்தையடி மாடசாமி கோவிலில் திருடிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

 நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள பொத்தையடியில் மாடசாமி கோவில் உள்ளது. கோவில் நிர்வாகியாக மணிகண்டன் (வயது 40) என்பவர் இருந்து வருகிறார். இவர் தினமும் இரவில் கோவிலை பூட்டுவிட்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல கோவிலை திறக்க வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த தங்கப்பொட்டு, வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.

இதன் மதிப்பு ரூ. 15 ஆயிரம் ஆகும்.  இது தொடர்பாக அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பொத்தையடியை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (70) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

 இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களை மீட்டனர்.
Tags:    

Similar News