உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சுரங்க பாதையில் 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

Published On 2022-01-26 15:33 IST   |   Update On 2022-01-26 15:33:00 IST
8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சுரங்க நடைபாதையை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர்:

சத்துவாச்சாரி கெங்கை அம்மன் கோவில் அருகே திறக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை 5.8 மீட்டர் அகலம் 25 மீட்டர் நீளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. 

சுரங்கப் பாதை முழுவதும் டைல்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நவீன மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சுரங்கப்பாதையில் அசம்பாவிதங்களைத் தடுக்க கண்காணிப்பு 8 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் போலீசார் 24 மணி நேரமும் சுரங்கப் பாதையில் கண்காணிக்க முடியும். சுரங்கப்பாதையில் எந்த நேரத்திலும் மழை தண்ணீர் தேங்காத வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் சுரங்கப்பாதையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எச்சில் துப்பக் கூடாது. சுரங்கப் பாதையில் நடந்து செல்லும்போது புகைபிடிக்கக் கூடாது. என்ற வாசகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் சுரங்கப்பாதையை தற்போது தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிப்பார்கள். வருங்காலத்தில் மாநகராட்சி மூலம் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

Similar News